Published On:Friday, December 6, 2019
ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்!

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
“நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரான என்னை இலக்கு
வைத்து நான் செய்யாத எனது நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இலத்திரனியல்,
அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கிடையில் ஆதாரமற்ற பொய்யான
குற்றச்சாட்டுகளைப் பரப்புவதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை அடையவும்
இனவெறியைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர் என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னைய அரசாங்கத்தின் அமைச்சராக பணியாற்றியபோது, என்னை இலக்கு வைத்து
அவர்கள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் வில்பத்து சரணாலயம்
அழிக்கப்பட்டு, முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் பயங்கரவாதி
சஹ்ரானுடனான தொடர்புகள் ஆகியவை அடங்கும்.
அந்த குற்றச்சாட்டுகளில் எந்தவொரு உண்மையும் இல்லாமல் குறுகிய நன்மை களைப்
பெறும் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் என்பதை நான்
உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு
உள்ளது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை
நடத்தியதோடு, பொலிஸ் விசாரணையின் போது நான் நிரபராதி என்று கூறி, அப்போது
பதில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு ஒரு அறிக்கையைச்
சமர்ப்பித்திருந்தார்.
ஆனால், இவர்கள் இந்த தலைப்புகளைப் பலமுறை தவறாகச் சித்தரித்துள்ளனர்
என்றும் இது ஒருசேறுபூசும் திட்டமாகக் கொண்டு செல்லப்படுவதால், எமது
அப்பாவி சமூகம் சிரமத்துக்கு ஆளாக்கப்படுகிறது.
சகலரும் ஒற்றுமையுடன் வாழும் எமது தாய்நாட்டில் இனம், மதம், சாதி பேதங்களை
உருவாக்குவதன் மூலம் அவர்கள் நாட்டை ஸ்திரமின்மைக்குட்படுத்த
முயற்சிக்கிறார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், வில்பத்து பாதுகாப்பு பகுதியில் உள்ள அரசு நிலங்கள் எதுவும் எனது
அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதையும் நான் உங்களுக்குச்
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1990களில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு 2009 முதல்
தங்கள் சொந்த கிராமங்களில் மீள்குடியேறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியபோது,
அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த தாங்கள் வழங்கிய
ஒத்துழைப்பை நான் மிகவும் நன்றிபூர்வமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
சுமார் 30 ஆண்டுகளாக, கைவிடப்பட்ட இந்த கிராமங்கள் வனப்பகுதியாக மாறியது.
எனவே, வனபாதுகாப்பு திணைக்களம் இதை வனப்பகுதி எனப் பெயரிட்டது.
இருப்பினும், இந்த சூழ்நிலையின் யதார்த்தத்தை உணர்ந்த, அப்போதைய ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இந்த மக்களின் காணிகளை அடையாளம் கண்டு
மீள்குடியேற்ற ஒரு சிறப்புப் பணிக்குழுவை நியமித்து அவர்களை மீள்
குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.