Published On:Sunday, December 1, 2019
புலிகளின் பணத்தை சுருட்டியவர் யாழில் செய்த லீலைகள் அம்பலம்..!!

அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஏகோபித்த வகையில் தமது வாக்குகளை சஜித்துக்கு வழங்கினார்கள். இது தமிழர்களின் உண்மை உணர்வைக் காட்டியது.
எதிர்பார்த்ததைப்போல் சில பெரிய அரசியல்வாதிகள் கோட்டபாஜவை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் கோட்டபாஜவை ஆதரித்த புது அரசியல்வாதிகளை ஆராயத் தொடங்கினால் ஒருவரைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
யார் இந்த புது அரசியல்வாதி?
பிரான்சில் சமையல்காரராக வேலை செய்த கந்தையா வைத்தியநாதனே அவர். இன்று இவர் பெரும் பணக்காரராக இருப்பது புலிகளின் சொத்துக்களே. இவரது குடும்ப பின்னணியை ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
இவரது இளைய மகன் படிக்கும்போது கொலை செய்யப்பட்டு ரயிலின் முன் தூக்கி எறியப்பட்டார்.
இக் கொலையில் சந்தேகப்பேர்வழியான மூத்த மகனுக்கு தொடர்பு இருப்பதனால் பொலிஸ் கேஸ் வாபஸ் பெறப்பட்டு மூத்த மகன் உடனடியாக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். இவரின் மனைவி பல முக்கியஸ்தர்களுடன் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து அதை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கைங்கரியங்களை செய்து வருகிறார்.
இதேபோல் சிங்கப்பூரில் இருக்கும் இவரது மாமா ஒருவரின் மகனை இவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சில மாதங்களின் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். இத் தற்கொலையில் சந்தேகம் நிலவுகின்றது.
அவரை மிரட்டி யாழில் உள்ள சொத்துக்களையும் சிங்கப்பூரில் உள்ள சொத்துக்களையும் தம் வசப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. இவரின் மனைவியுடன் மாமா நெருக்கமாக உள்ள புகைப்படங்களை காட்டியே மிரட்டி சொத்துக்களை அபகரித்துள்ளனர்.
சூனியங்கள் செய்து குடும்பங்களை பிரிக்கும் கைங்கரியங்களையும் செய்து வருகின்றனர். மகன், மாமா என்பவர்களை கொலை செய்து புலிகளின் சொத்தில் பணக்காரனாக வலம்வருபவர்தான் இந்த அரசியல்வாதி.
மாமனாரிடம் அபகரித்த பணம், புலிகளின் சொத்தின்மூலம் சுருட்டிய பணத்தை வைத்து இப்போது திருகோணமலையில் உல்லாசவிடுதி கட்டுகிறார். இப்படிப்பட்ட பல கைங்கரியங்களை செய்தவர் இன்று உத்தமன்போல் வலம்வருகின்றார். எதிர்வரும் தேர்தல் காலங்களில் சரியான பாடம் புகட்டவேண்டிடியது தமிழர்களின் கடமை