எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, December 3, 2019

மன்னாரில் தொடரும் கன மழை- வயல் நிலங்கள் நீரில் மூழ்கின

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக  விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காணிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.

இதனால் பல இலட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாரில் தொடரும் கன மழை- வயல் நிலங்கள் நீரில் மூழ்கின

தொடர்ச்சியாக நீர் வடிந்தோட முடியாத நிலையில், வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால் அனைத்து முளை நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சொந்த தேவைக்குக்கூட நெல்லை பெற்றுகொள்ள முடியாத நிலையுள்ளதாகவும் பல இலட்சம் செலவு செய்து தற்போது அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கட்டைகாடு பகுதியில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149