எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Thursday, March 21, 2019

கொழும்பில் மசாஜ் நிலையமென்ற பெயரில் பெண்கள் செய்யும் மோசமான செயல்!

கொழும்பில் புறநகர் பகுதியில் ஆபாச தொழிலில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாணந்துறையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட ஹோட்டல் ஒன்று பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கு பணியில் ஈடுபட்ட பல பெண்கள், முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.



மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி நீண்ட காலமாக நடத்தி செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ள நிலையில், அதற்கமைய பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முகாமையாளர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஹோட்டலின் உரிமையாளர் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் மூன்று இனங்களையும் சேர்ந்த திருமணமான பெண்களே இருந்தனர் என பொலிசார் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, அம்பாறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149